தமிழகத்த்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் 31 வரையில் 75 லட்சம் பயணிகள் வருகைபுரிந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், "பயண¤களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் மற்றும் ஆன¢மிகம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு வருகைதருகின்றனர். அதேபோல தொழில்ரீதியாகவும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பத்தினரை சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க அழைத்து ருகின்றனர்" என்கிறார். வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 2.04 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 2.1 சதவிகிதமாக உயரர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25 முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அதிகமான பயணிகள் வருவதாக கண்டறிந்துள்ளனர். சென்னைக்கு மட்டும் 8,30,620 உள்நாட்டுப் பயணிகள் வருகைதந்துள்ளனர். அதற்கடுத்த இடத்தை மதுரை நகரம் பெறுகிறது.
No comments:
Post a Comment