Sunday, 12 June 2011

சகோதர சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?


கடந்த சில நாட்களாக ஒரு குறுஞ்செய்தி ஒன்று மொபைல்களில் உலா
வருகின்றது!


விஷயம் இதுதான்................."
உணர்வு அலுவலகத்தை ம.ம.க,கட்சியினர் கைப்பற்றி விட்டதாகவும், அதை மீட்க சட்டமன்ற முற்றுகைஎனவும் ,அணிதிரளுங்கள் என அந்த செய்தி கூறுகின்றது."



  • சேலத்தில் அல்தாபி தாக்கப்பட்டதற்கு சட்டமன்ற முற்றுகை!.


  • எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் பிரச்சினைக்கு முதல்வர் வீடு

முற்றுகை!

இதுவெல்லாம் சமுதாயத்திற்கான பிரச்சினைகளா?தனி நபர்கள் சார்ந்தவகளா?
சகோதரர்களுக்குள் நடக்கும்சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?



அப்படியே முற்றுகை எனில் வட மரைக்காயர் தெருவில் உள்ள த.மு.,மு.க
அலுவலகத்தை அல்லவா முற்றுகை இட வேண்டும்.



தமிழத்தில் பெரும் படைஎம்மிடம் உள்ளது என பல மேடைகளில் பேசிவரும்
அண்ணனே,


அந்த பள்ளிவாசலை மீட்டோம்!இந்த பள்ளிவாசலை மீட்டோம்!
என்று கூறும் நீங்கள்,உணர்வு அலுவலகத்தை மீட்க,



இவ்வளவு காலமும் ஒரே எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை கூட்டாதது ஏன்?



(இவ்வளவு காலமும்திறந்தா இருந்தது,பூட்டி தானே இருந்தது,பூட்டி இருந்ததை
பூட்டினார்கள் என முற்றுகை ஏன் என மக்கள் கேட்கிறார்கள்!)
மேலப்பாளையம்,திருச்சி சிங்கார தோப்பு,கடையனல்லூர் என ஜாக் அமைப்பிற்க்கு சொந்தமான பள்ளிவாசல்களையும் ,
எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசலையும் அபகரித்த அண்ணன் ஜமா அத்திற்க்கு



[மேலே குறிப்பிட்ட பள்ளிவாசல்களை அபகரித்தது உண்மைதான் ,என அண்ணனே ஒப்புக்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ காணஇங்கு கிளிக் செய்யுங்கள்]] அல்லாஹ் வைத்த ஆப்புதான் இது!!!

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்"


என்பதற்கேற்ப,நடந்த இந்த படிப்பினை! அண்ணனும்,அண்ணனின் ஜமா அத்தும் திருந்துவார்களா????????


(அண்ணனிடம் பயிற்சி பெற்றவர்கள்,அண்ணனை போலவே நடந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது!!)

பொய்யர்கள் வெளியிட்ட போர்ஜரி கடிதத்திற்கு விளக்கம்!

அன்பிற்கினிய இணைய தள வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் உம்ரா சென்று இருந்ததால் செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிட முடியாமல் போனது , மேலும் உம்ரா சென்று விட்டு கடந்த 16.5.11 அன்று திரும்பி விட்டாலும் கூட செய்திகள் வெளியிட முடியாததற்கு காரணம் எனது மாமனார் கீழே விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக இருந்ததால், அவரை பார்ப்பதற்காக சொந்த வூர் சென்று குடும்பத்தோடு தங்க நேரிட்டதாலும் , நமது தளத்தில் செய்திகள் வெளியிட முடிய வில்லை.
இதை பயன் படுத்தி அவதூறு ஜமாத்தினர் தங்களின் போய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எஸ்.எம் பாக்கருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்றும் , அவர் என்னை இயக்கத்தை விட்டு வெளியேற்ற சதி செய்வதாகவும் , நான் கருத்து வேறுபாட்டால் எஸ்.எம்.பாக்கருக்கு கடிதம் எழுதியது போல் பொய்யாக ஒரு கடிதத்தை எழுதியதோடு போர்ஜரியாக எனது கை எழுத்தையும் போட்டுள்ளனர்.
போலி கை எழுத்து போடுவதை பிழைப்பாக கொண்டவர்கள் என் கை எழுத்தையாவது, த.த.ஜ.வில் உள்ள பழைய ஆவணங்களில் பார்த்து ஒழுங்காக போட்டிருக்கலாம்! என்ன செய்வது இ.த.ஜ.வை விட்டு நான் வெளியேற வேண்டும் என்கிற இவர்களின் பேராசை இந்த இழி செயலை செய்ய வைத்துள்ளது! அந்த அளவுக்கு நமது எழுத்தும் , பேச்சும் இவர்களின் முகத்திரையை கிழித்து பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது . என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ? நான் உம்ராவில் இருந்து வந்ததும் உண்மை வெளியாகி எனக்கும் பாக்கருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்தால், நம்முடைய ஆதரவாளர்களே நம்மை கேவலமாக பார்ப்பார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் இவர்களால் எப்படி இது போன்ற பொய்களை எழுதவும் பரப்பவும் முடிகிறது? அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத அரசியல்வாதிகள் கூட இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதில்லை ! கருணாநிதி கூட 1990-இல் ஜெயலலிதா எழுதிய ஆனால் வெளியிடாத கடிதத்தை வெளியிட்டு கேவலப் பட்டார், ஆனால் அண்ணனோ நான் எழுதாத கடிதத்தை எழுதியதாக வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.
இந்த அவதூறு விஷயம் நான் உம்ராவில் இருந்த போது எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது ! நான் மிகுந்த மன வேதனை கொண்டு காஃபாவில் நின்று கை ஏந்தினேன், எப்படி நபி ஸல் அவர்கள் ஒட்டக குடலை சுமந்து கொண்டு கைஎந்தினார்களோ அதே போன்று அதே காஃபாவில் நின்று "யா அல்லாஹ் ! இந்த அவதூறு பரப்பியோரை
நீ பார்த்துக் கொள்" என்று அவனிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்!
தாமதமானாலும் அல்லாஹ்வின் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
மேலும் இணையத் தளத்தில் மட்டுமின்றி இந்த போர்ஜரி கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து பரப்பிக் கொண்டுள்ளனர், மேலும் இது குறித்து த,த,ஜ வினர் உள்பட பல சகோதரர்கள் நம்மிடம் விளக்கம் கேட்டனர்,கேட்கும் அனைவருக்கும் நான் சொல்வதெல்லாம் ' இந்த கடிதத்தை எழுதியவன் , திருத்தியவன் , வெளியிட்டவன் , பரப்பியவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ! என பிரார்த்தியுங்கள் அது போதும் ' எனக் கூறியதை அடுத்து 'அவர்களின் ஆதரவாளர்கள் கூட இந்த விசயத்தில் வருந்துகின்றனர், மேலும் எனக்கும் சகோதரர் எஸ்,எம்,பாக்கர் அவர்களுக்கும் எந்த பிணக்கோ கோபமோ இல்லை என்றும் , தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன் என்பதையும் இன்ஷா அல்லாஹ் இவர்களை தோலுரிக்கின்ற வேலை தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண் : செங்கிஸ் கான்,
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


Wednesday, 8 June 2011

முஸ்லிம் மதகுருக்களுக்கு தடை விதித்த விமானி

அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில்அரபி மொழி ஆசிரியராக வேலை பார்ப்பவர் மசூதுர் ரஹ்மான், இவரது மற்றொரு முஸ்லிம் மதகுரு நண்பரும், கரோலினா என்ற இடத்திற்கு செல்வதற்காக அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 4/5/11 அன்று விமானத்தில் ஏறச் செல்லும்போது அவர்கள் அதில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தின் பைலட் அவர்களை ஏற்றுவதற்கு உத்தரவு அளிக்காததால் அவர்கள் அதில் பயணிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்டா ஏர்லைன்ஸில் மாற்று டிக்கெட் கொடுக்கப்பட்டு அதில் பயணம் செய்தனர்.இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தைச் சார்ந்த ஆலன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தாடி வைத்திருந்தால் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க பைலட்கள் மறுப்பது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : dailymuslimnews.blogspot.com/

 

Saturday, 4 June 2011

காவித் தீவிரவாதத்திலிருந்து திசை திருப்பவே 5 ஸ்டார் சத்தியாகிரகம் : திக்விஜய் சிங்!

பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
நன்றி : இந்நேரம்.காம்
தகவல் : அப்துல்லாஹ்  

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.

இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        ஸெய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்ஸார்
·        ஷேக்
·        மாப்பிள்ளை
·        துத்திகோலா

 முக்கிய குறிப்பு:

     ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு, பட்டாணி, ஷரீப், பரிமா"  என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
-முஹம்மது முனீர்

துணைத் தலைவர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

Saturday, 28 May 2011

ஒரு ஒப்பீடும்; ஒரு இரங்கலும்; இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்!


அரசியலில் பங்கெடுக்கும் முஸ்லிம்கள் நாளடைவில் தேர்ந்த அரசியல்வாதிகளாகவே மாறிவிடுவதை பார்க்கிறோம். இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலும் அவர்களை நாம கண்டுகொள்வதில்லை. ஆனாலும் அவர்களது செயல் இஸ்லாத்திற்கு முரணாக அமையும்போது சக சகோதரன் என்ற அடிப்படையில் சுட்டிக்கட்டவேண்டும் என்பதற்காக சமீபத்திய இரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தடுமாற்றத்தை இங்கே பதிவு செய்கிறோம். 

ஜெயலலிதாவின் முந்தைய  அட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. இவர் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். நாமறிந்தவரை அவைகளில் ஒன்றிற்கு கூட இஸ்லாமிய பெயர்கள் இல்லை. மாறாக அவரது தலைவர் எம்.ஜி.ஆர் பெயரையே சூட்டியுள்ளார். சரி! அது அவரது விருப்பம். இத்தகைய இவரது கல்வியகத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்,

''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறைவன் தன்னுடைய படைப்புகளில் வேறுபாடு காண்பதில்லை. அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களை வேறுபடுத்தி பார்க்காமல் எல்லோரையும் ஒரே கண்டோட்டத்துடன் அணுகவேண்டும்' என்று பேசியுள்ளார்.  

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்பதை தவிர இவரது பேச்சின் முற்பகுதியும் பிற்பகுதியும் சரியானதுதான்.  எழுத்தை அறிவித்தவன் இறைவன் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அதுமட்டுமன்றி ''அவனே எழுதுகோலை கொண்டு கற்றுத் தந்தான்'' என்றும் குர்'ஆன் கூறுகிறது. அதற்காக இன்றைக்கு எழுதுகோலை கொண்டு கற்றுத்தரும் அனைவரும் இறைவனுக்கு சமமாகி விடமுடியுமா? ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் எனில், அவர்களை சுற்றி பாலியல் குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளில் வெளியாகிறதே! இவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றால் இறைவனும் இதுபோன்ற தேவையுள்ளவன் என்று கருதுகிறாரா அன்வர்ராஜா? இறைவனுக்கு சமமாக எவரும் எந்த விசயத்திலும் ஒப்பாக முடியாது என்று அதாவது ''அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  'என்று ஒற்றைவரியில் நெற்றிப்  பொட்டில் அடித்தது போல்  திருமறை குர்'ஆன் கூறுவதை மறந்து விட்டாரா அன்வர்ராஜா? எனவே இனியாவது இறைவனோடு எவரையும் ஒப்பிட்டு பேசும் குணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அடுத்து, சமீபத்தில் மறைந்த பிரபல சாமியார்; அல்ல அல்ல சாமியார் என்பதை விட தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறிக் கொண்ட சாய்பாபா என்பவர் மரணித்தார். எல்லா மனிதர்களும் மரணிப்ப்பவர்களே; அந்த வரிசையில் சாய்பாபா ஒரு சாமான்ய மனிதர் எனவே மரணித்து விட்டார். அவரது மரணத்தை கொண்டு நாம் மகிழவோ, வருந்தவோ எதுவுமில்லை. ஆனால் தன்னை சிறுவயது முதல் ஏகத்துவ சிந்தனையில் வளர்ந்ததாக கூறிக் கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எனும் அரசியவாதி, சாய்பாபா மறைவுக்காக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

''இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓரிடத்திலும், சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மற்றொரு இடத்திலும் கூறியதோடு,  சாய்பாவை சிறந்த சமூக சேவகராகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். 

சாய்பாபா எந்த வகை ஆன்மீகப்[?]பனியால் பக்தர்களை உலகெங்கிலும் உருவாக்கினார் என்று ஜவாஹிருல்லாஹ் அறியாததா? இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணிக்கும் எவருக்கும் இஸ்லாத்தில் மன்னிப்பில்லை என்ற கொள்கையை உணர்ந்த ஜவாஹிருல்லாஹ், தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறியவரின் இறப்பிற்காக கடலளவு கண்ணீர் உகுப்பது ஏன்? சாய்பாபாவின் மறைவிற்கு கருணாநிதி-ஜெயலலிதா-விஜயகாந்த்-தங்கபாலு-பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அறிக்கை விட்டு, தன்னை முன்னணி  அரசியல்வாதிகளில் ஒருவராக காட்டியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். நாத்திக கொள்கையுடைய கி.வீரமணி கூட தனது கொள்கை உறுதியால் சாய்பபவிற்கு இரங்கல் தெரிவிக்காத நிலையில், ஜெயலலிதாவிற்கு அடுத்து விரைவாக அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் இதிலும் அம்மாவின் மனம் குளிர செய்யும் நோக்கமா? அல்லது இப்படியெல்லாம் அனைத்தையும்  சரிகண்டால்தான் அரசியலில் காலம் தள்ளமுடியும் என்ற முன்னேற்பாடா? கி.வீரமணிக்கு உள்ள கொள்கை உறுதி கூட, ஜவாஹிருல்லாஹ்விற்கு  இல்லையே என்பதை என்னும்போது, இவரைப் போன்ற கல்வியாளர்கள்  அரசியலுக்கு சென்றால் அரசியல் பண்படும்; சமுதாயம் பயன்பெறும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகி விட்டதோ என்ற எண்ணம் இவருக்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்படுவதற்குள் ஜவாஹிருல்லாஹ் தன்னை சீர்திருத்திக் கொள்வது நல்லது.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

Friday, 27 May 2011

பேரணாம்பட்டில் முதியோருக்கு உதவி தொகை கிடைப்பதில் காலதாமதம்

                               குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டில் முதியோர் உதவித் தொகையை முன்னுக்கு பின் முரணாக காலதாமதமாக அனுப்புவதால் தமிழக  அரசின் உதவித்தொகையை பெரும் முதியோர், உடல் உணமுற்றோர் மற்றும் விதவைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மார்ச் மாதம் கிடைக்கவேண்டிய உதவித்தொகை பெரும்பலனனோருக்கு அனுப்பப்படாமல் ஏப்ரல் மாதத்துக்கான உதவித்தொகை மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதைபற்றி சம்பத்தப்பட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மார்ச்மாதத்துக்கான உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் 
- அப்துல்லாஹ்

Wednesday, 25 May 2011

கல்வி உதவிக்கான சமுதாய அமைப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய மாணவ சொந்தங்களே! ப்ளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்று கல்லூரிக்கு செல்ல தயாராக இருக்கும் நீங்கள், இன்றைய மேற்படிப்பிற்கான கல்விச் செலவை நினைத்து கவலை கொள்கிறீர்கள். உங்கள் குடும்பப் பொருளாதார சுமையால் மேற்படிப்பு எண்ணம் கனவாகி போகுமோ என கவலை கொள்ளாதீர்கள்.
கீழ்காணும் நம் சமுதாய அமைப்புகள் உங்களது கல்வி செலவை ஏற்க தயாராக இருக்கின்றன. அவைகளை தொடர்பு கொண்டு உங்கள் மேற்படிப்பை வெற்றிகரமாக முடிக்கவும். நீங்கள் பெறும் பட்டத்தினை கொண்டு சமுதாயம் பயன் பெறவோம் துஆச் செய்கின்றோம்.
மனித வள மேம்பாட்டு அமைப்பு (HRDO)
C/o.கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை
முஸ்லிம் பஜார், கீழக்கரை - 623517
இராமநாதபுரம் மாவட்டம்.
ஹஸன் அலி (9443503554)

Monday, 16 May 2011

நடந்து முடிந்த சட்டமன்றங்களில் நுழையும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, புது புரட்சியினை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில் 6 பேரும், பாண்டிச்சேரியில் 1 நபரும் சட்டமன்றத்திற்குள் நுழைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணித்து!

          நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் S.M.பாக்கர் மற்றும் முனீர் ஆகியோர் இந்த நிகழச்சியினை புறக்கணித்தனர்.
ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிரான ஆட்சிக்காகதான் அதிமுகவை தேர்தலுக்காக ஆதரித்தது இதஜ. அதற்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை நிரூபித்துள்ளது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 13 May 2011

பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி

                     2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆ.இ.அ.தி.மு. க. வின் கூட்டணியை (203/234) பெருவாரியான தொகுதி வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த தமிழக வாக்கள பெருமக்களுக்கு பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி., மற்றும் வரலாறு காணாத அளவிற்க்கு செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்க்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கோள்கிறோம்..


2011 தமிழக சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளின்  முடிஉகள்  தெரிந்து கொள்ள
(தொகுதி எண்/ தொகுதி/ வெற்றி வேட்பாளர் / வாக்கு வித்தியாசம் ) 

Friday, 6 May 2011

தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை 23% அதிகரிப்பு

தமிழகத்த்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் 31 வரையில் 75 லட்சம் பயணிகள் வருகைபுரிந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், "பயண¤களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் மற்றும் ஆன¢மிகம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு வருகைதருகின்றனர். அதேபோல தொழில்ரீதியாகவும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பத்தினரை சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க அழைத்து ருகின்றனர்" என்கிறார். வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 2.04 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 2.1 சதவிகிதமாக உயரர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25 முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அதிகமான பயணிகள் வருவதாக கண்டறிந்துள்ளனர். சென்னைக்கு மட்டும் 8,30,620 உள்நாட்டுப் பயணிகள் வருகைதந்துள்ளனர். அதற்கடுத்த இடத்தை மதுரை நகரம் பெறுகிறது.

கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது

         கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது
9/11 தாக்குதல் நடந்ததிலிருந்து அதில்  தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு கவுன்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 779 பேரில் பலரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் தயாரித்துள்ள ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. கைதிகள் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாயின.


ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தின் போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டத்திற்கு புறம்பான இந்த சிறையை மூடுவேன் என பாரக் ஒபாமா வாக்களித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் இன்னமும் நிறைவேற்றவில்லை. இவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் இன்னமும் 172 பேர் அச்சிறையில் உள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிலவற்றை ஏற்கனவே த கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ்கள் விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று வெளியிட்டுள்ளன.

உஸாமாவுக்கு துஆ செய்வது ஏன்?

பிரபல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த முபாரக் மதனி அவர்கள், உலக முஸ்லிம்களின் நல்வாழ்விற்காக அரும் பாடுப்பட்ட இஸ்லாமிய போராளி உஸாமா பின் லாதீன் அவர்களுக்கு காய்பு ஜனாஸா தொழுகை நடத்துவதின் அவசியம் குறித்து விளக்குகிறார்கள்.

Friday, 22 April 2011

ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் அரசு

   ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள்- சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூறமுடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநியான அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது. மகாவீர் அவர்கள் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் மகாவீர் தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே நேரத்தில் மகாவீர் தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் 16 ம் தேதி மூடப்படும். இதே போல் ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மதத்தையும் திருப்தி படுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்தவரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். எனவே அரசு இது விஷயத்தில் நல்லமுடிவை எட்டவேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும். இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப் போல் மற்றவர்களும் பட்டினி கிடக்கவேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்க்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் மெல்லக்கொல்லும் விஷமாகும். எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு முயற்ச்சிப்பது தான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும். அரசு

Monday, 4 April 2011

வக்பு வாரியங்கள்

வக்பு சொத்துகளை செயல்திறனுடன் நிர்வகிக்க மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவை
 
பெருமளவு ஆக்கிரமிப்பு, முறைகேடு, கவனிப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள வக்பு வாரிய சொத்து களை நிர்வகிப்பது கவனத்துக் குரிய விஷயமாகியுள்ளது. இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. அதையும் சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு முன்பு முக்கியப் பங்கு வகிக்கும் சட்ட மற்றும் நிர்வாகரீதியான பலவீனங்களைப் பேசவேண்டும். இதனால் இந்த நாட்டிலுள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் அபிவிருத்தி செய்யப்படாமலேயே உள்ளன. வக்பு வாரியத்தின் அமைப்பு ஒழுங்கும் இதற்கு உதவவே இல்லை.

இரக்கமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து  இந்த  அமைப்பை உருவாக்கினார் கள். இதன் பயன்கள் அனைத்தும் மத, தர்ம மற்றும் கல்வி காரியங்களுக்குப் பயன் படவேண்டும்.
மைய அரசுச் சட்டப்படி வக்பு  சொத்துகள் மாநில வக்பு வாரியங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது அரசியல்ரீதியான செயல்முறையில் நடக்கும். சிலசமயம் மாநில அரசு நியமிக்கும் ஒருவரால் நிர்வகிக்கப்படும்.
இந்த அமைப்பின் உடைமைகளை நிர்வகிப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்கள் கீழ்கண்டவாறு சுருக்கப் பட்டுள்ளன.
பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு: 1947 பிரிவினை ஏற்பட்டு பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்தபோது, அப்போது நகரங்களில் குடிபெயர்ந்த மக்கள் இந்த உடைமைகளை ஆக்கிரமித்தார்கள். அதற்குப் பின்னர் பல ஆண்டுகளுக்கு இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்த அமைப்பும் இல்லை.
அரசு மற்றும் அரசுசார் அமைப்புகளின் ஆதிக்கம்: அரசுத் துறைகளாலும் பல உடைமைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறைவான வாடகை அல்லது வாடகையே தராமல் இந்த அலுவலகங்கள் இயங்குகின்றன.
 குறைந்த வாடகை: பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங் களாகவும் வீடுகளாகவும் பயன்படுத்தத் தொடங்கிய இடங்களுக்கு இன்னமும் மிகக் குறைவான வாடகையே தரப்படுகிறது.
வழக்குகள்: பல உடைமைகள் வழக்கில் உள்ளன. அவற்றிலிருந்து எந்த வருவாயும் வருவதில்லை.
பலவீனமான வாடகைதாரர் சட்டம்: இந்தச் சட்டம் வீட்டு உரிமையாளர்களைவிட வாடகைக்கு இருப்பவர்களுக்கே சாதகமாகத் திகழ்கிறது. அத்துடன் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் சுமையும் அதிகமாக உள்ளது.
வக்பு சட்டத்தின் பிரச்னைகள்: 1) இந்தச் சட்டத்தின்படி நீண்டகால குத்தகை அனுமதிக்கப்படுவதில்லை. நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கப்படாவிட்டால் நல்ல லாபம் இருக்காது. 2) இந்த அமைப்பின் சொத்துகள் பொது இடங்கள் சட்டத்தின் கீழ்வருவதில்லை. 3) இதனால் கூடுதல் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை எஸ்டேட் அதிகாரியாக நியமித்து ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றலாம் 4) வக்பு சொத்துகளைக் கணக்கிட்டு ஆய்வு செய்யும் பணியை குறித்த காலத்தில் முடிக்க மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவரை நியமிக்க வேண்டும். 5) வழக்குகளை விசாரிப்பதற் காக மாநிலம்தோறும் வக்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும்.
மனநிலையில் மாற்றம் தேவை
வக்பு சொத்துகளை வர்த்தக அடிப்படையில் லாபத்தைத் தருபவையாக மாற்ற புதுமையான  சிந்தனை அவசியமாக உள்ளது. நகரத்தில் உள்ள உடைமைகளைக் கொண்டு சில மாநிலங்களில் மிகப்பெரிய  முன்னேற்றம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வருவாயில் கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்கல்வி மையங்களை முஸ்லிம் சமூகத்துக்கு உருவாக்கலாம். இதற்கு உதாரணங்களாக கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உள்ளன. வட இந்தியாவில் உள்ள மனப்போக்கு மிகவும் பழைமையானது. இதனால் வர்த்தக நோக்கு இல்லாமல் உள்ளது.
மத்திய வக்பு சபைக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்து வலுப்படுத்தி மாநில வாரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் தேவை. நலிந்த வக்பு வாரியங்களை தூக்கி நிறுத்த கடன்களும் நிதியுதவிகளும் வழங்கவேண்டும்.  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். இந்த மாதிரியான சட்டரீதியான நிர்வாகரீதியான அபிவிருத்திகளால் மாநில வாரியங்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த முடியும்.       
(இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எழுத்தாளருடைய சொந்தக் கருத்துகள்) 
 தகவல் :- The sunday Indian   
படங்கள் : INTJ - Pernambut