Wednesday, 25 May 2011

கல்வி உதவிக்கான சமுதாய அமைப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய மாணவ சொந்தங்களே! ப்ளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்று கல்லூரிக்கு செல்ல தயாராக இருக்கும் நீங்கள், இன்றைய மேற்படிப்பிற்கான கல்விச் செலவை நினைத்து கவலை கொள்கிறீர்கள். உங்கள் குடும்பப் பொருளாதார சுமையால் மேற்படிப்பு எண்ணம் கனவாகி போகுமோ என கவலை கொள்ளாதீர்கள்.
கீழ்காணும் நம் சமுதாய அமைப்புகள் உங்களது கல்வி செலவை ஏற்க தயாராக இருக்கின்றன. அவைகளை தொடர்பு கொண்டு உங்கள் மேற்படிப்பை வெற்றிகரமாக முடிக்கவும். நீங்கள் பெறும் பட்டத்தினை கொண்டு சமுதாயம் பயன் பெறவோம் துஆச் செய்கின்றோம்.
மனித வள மேம்பாட்டு அமைப்பு (HRDO)
C/o.கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை
முஸ்லிம் பஜார், கீழக்கரை - 623517
இராமநாதபுரம் மாவட்டம்.
ஹஸன் அலி (9443503554)

Monday, 16 May 2011

நடந்து முடிந்த சட்டமன்றங்களில் நுழையும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, புது புரட்சியினை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில் 6 பேரும், பாண்டிச்சேரியில் 1 நபரும் சட்டமன்றத்திற்குள் நுழைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணித்து!

          நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் S.M.பாக்கர் மற்றும் முனீர் ஆகியோர் இந்த நிகழச்சியினை புறக்கணித்தனர்.
ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிரான ஆட்சிக்காகதான் அதிமுகவை தேர்தலுக்காக ஆதரித்தது இதஜ. அதற்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை நிரூபித்துள்ளது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 13 May 2011

பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி

                     2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆ.இ.அ.தி.மு. க. வின் கூட்டணியை (203/234) பெருவாரியான தொகுதி வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த தமிழக வாக்கள பெருமக்களுக்கு பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி., மற்றும் வரலாறு காணாத அளவிற்க்கு செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்க்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கோள்கிறோம்..


2011 தமிழக சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளின்  முடிஉகள்  தெரிந்து கொள்ள
(தொகுதி எண்/ தொகுதி/ வெற்றி வேட்பாளர் / வாக்கு வித்தியாசம் ) 

Friday, 6 May 2011

தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை 23% அதிகரிப்பு

தமிழகத்த்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் 31 வரையில் 75 லட்சம் பயணிகள் வருகைபுரிந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், "பயண¤களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் மற்றும் ஆன¢மிகம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு வருகைதருகின்றனர். அதேபோல தொழில்ரீதியாகவும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பத்தினரை சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க அழைத்து ருகின்றனர்" என்கிறார். வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 2.04 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 2.1 சதவிகிதமாக உயரர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25 முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அதிகமான பயணிகள் வருவதாக கண்டறிந்துள்ளனர். சென்னைக்கு மட்டும் 8,30,620 உள்நாட்டுப் பயணிகள் வருகைதந்துள்ளனர். அதற்கடுத்த இடத்தை மதுரை நகரம் பெறுகிறது.

கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது

         கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது
9/11 தாக்குதல் நடந்ததிலிருந்து அதில்  தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு கவுன்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 779 பேரில் பலரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் தயாரித்துள்ள ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. கைதிகள் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாயின.


ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தின் போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டத்திற்கு புறம்பான இந்த சிறையை மூடுவேன் என பாரக் ஒபாமா வாக்களித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் இன்னமும் நிறைவேற்றவில்லை. இவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் இன்னமும் 172 பேர் அச்சிறையில் உள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிலவற்றை ஏற்கனவே த கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ்கள் விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று வெளியிட்டுள்ளன.

உஸாமாவுக்கு துஆ செய்வது ஏன்?

பிரபல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த முபாரக் மதனி அவர்கள், உலக முஸ்லிம்களின் நல்வாழ்விற்காக அரும் பாடுப்பட்ட இஸ்லாமிய போராளி உஸாமா பின் லாதீன் அவர்களுக்கு காய்பு ஜனாஸா தொழுகை நடத்துவதின் அவசியம் குறித்து விளக்குகிறார்கள்.